Monday, 24 November 2014

வாழ்வின் பத்து விதிகள்

வாழ்வின் பத்து விதிகள்

செரி காட்டர் ஸ்காட்டின் என்பவர் சுயமுன்னேற்றம் பற்றி நிறைய ஆராய்ந்து எழுதியிருக்கிறார். அவர் மனிதராயிருக்க பத்து விதிகள் என கீழ்வருவனவற்றைக் குறிப்பிடுகிறார். 

ஒன்றாம் விதி : நீங்கள் ஒரு உடலைப் பெறுவீர்கள். (நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ, வாழ்க்கை முழுவதும் அது உங்களுடையதுதான். ஆகவே,அதை ஏற்றுக்கொள்ளுங்கள். உள்ளே இருப்பதுதான் முக்கியம்.) 

இரண்டாம் விதி: உங்களுக்கு பாடங்கள் கிடைக்கும் 

மூன்றாம் விதி: தவறுகள் என்பதே கிடையாது. எல்லாமே பாடங்கள்தான். 

நான்காம் விதி: கற்று முடியும்வரை பாடங்கள் தொடரும். 

ஐந்தாம் விதி: கற்றல் முடிவதில்லை.

ஆறாம் விதி: இருக்கும் இடத்தைவிட சிறந்தது எதுவுமில்லை. 

ஏழாம் விதி: பிறர் உங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளே! 

எட்டாம் விதி: உங்கள் வாழ்க்கையை எப்படி அமைக்கிறீர்கள் என்பது உங்களைப் பொறுத்தது. 

ஒன்பதாம் விதி: உங்களுக்கான பதில்கள் உங்களுக்குள்ளேயே இருக்கின்றன. 

பத்தாம் விதி: இவை அனைத்தையும் பிறக்கும்போது மறந்துவிடுவீர்கள்.
( நாம் அனைவரும் இத்தகைய குணங்களோடுதான் பிறக்கிறோம். ஆனால் நமது ஆரம்பகால அனுபவங்கள் நம்மை நமது ஆன்ம பலத்தை இழக்கச் செய்து பொருளியல் உலகினுள் திருப்பி விடுகின்றன. நாம் சந்தேகமும் நம்பிக்கையின்மையும் கொண்டவர்களாகிறோம்.)